ETV Bharat / state

தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

திருநெல்வேலி: கூடங்குளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த மளிகை கடைக்காரை காவல்துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Mar 9, 2021, 11:02 PM IST

pan masala
pan masala

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான காவலர்கள் சௌந்தரலிங்கபுரம் தங்க பிள்ளை தோட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

pan masala
கைது செய்யப்பட்ட கண்ணன்

அதன்பேரில் காவலர்கள் அந்த வீட்டில் சோதனையிட்டபோது மளிகை கடை நடத்தி வரும் கண்ணன் (42) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான காவலர்கள் சௌந்தரலிங்கபுரம் தங்க பிள்ளை தோட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

pan masala
கைது செய்யப்பட்ட கண்ணன்

அதன்பேரில் காவலர்கள் அந்த வீட்டில் சோதனையிட்டபோது மளிகை கடை நடத்தி வரும் கண்ணன் (42) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனது வீட்டிற்குள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.